செய்திகள் :

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

post image

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, அந்த விமானத்தை இயக்கி வந்த பைலட், தங்கள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார்.

flight

பின்னர், அந்த விமானம் புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் உள்ள நார்த்தாமலை அருகே மலை மாதா கோவில் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அப்படி, விமானம் தரையிறக்கப்பட்டதில் பொதுமக்களுக்கோ அல்லது வாகனப் போக்குவரத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த விமானிகள் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், விமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிந்த பிறகு, இந்த வினோத காட்சியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. அதில் பலரும், அந்த சிறிய ரக விமானம் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

flight

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

அதோடு, கீரனூர் காவல் துறையினர் விமானம் தரையிறங்கிய இடத்தை உடனடியாகச் சுற்றி வளைத்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முன்பகுதி சேதம் ஏற்பட்டதால் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கியதாக தெரிகிறது. இருந்தாலும், விமானம் தரையிறங்கியதற்கான உண்மையான மற்றும் முழுமையான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என சொல்லப்படுகிறது.

spot

அதேபோல், விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியதால், புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க

பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு

"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ... மேலும் பார்க்க

'உன் மீதே போக்சோ வழக்கு கொடுப்பேன்' தந்தையை மிரட்டிய 17 வயது மகள் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட மேற்கு நெய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு மனைவி, 17 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பிளஸ் ... மேலும் பார்க்க

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க