செய்திகள் :

'உன் மீதே போக்சோ வழக்கு கொடுப்பேன்' தந்தையை மிரட்டிய 17 வயது மகள் - நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட மேற்கு நெய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு மனைவி, 17 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். கட்டட தொழிலாளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்று தனியாக வசித்துவருகிறார். மகளையும் மகனையும் கட்டட தொழிலாளி கவனித்து வந்தார்.

கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த ஒரு பிரச்னையில் கட்டட தொழிலாளி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தனது பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும்படி உறவினர்களிடம் கூறிவிட்டு கட்டட தொழிலாளி தலைமறைவானார். இதற்கிடையே கணவர் தனது பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு தலைமறைவான விவகாரம், பிரிந்துசென்ற அவரது மனைவிக்கு தெரிய வந்தது. அவர் குழந்தைகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

இதனிடையே கட்டட தொழிலாளியின் மகளும் அந்த பகுதியை சேர்ந்த  ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் கட்டட தொழிலாளியின் மனைவிக்கு ஏற்கனவே தெரியுமாம். கட்டடத் தொழிலாளியின் மனைவி அந்த வாலிபரை தொடர்பு கொண்டு மகளுக்கு உணவு கொடுக்கும்படி கூறி உள்ளார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அந்த வாலிபர் மாணவியின் வீட்டுக்குச் சென்று உணவு கொடுத்து வந்தார். மேலும், அந்த மாணவியும், வாலிபரும் வீட்டில் தனியாக சந்தித்துக்கொள்வதும் நடந்துள்ளது.

போக்ஸோ புகார் (சித்திரிப்புப் படம்)

இதற்கிடையே நேற்று முன்தினம் கட்டட தொழிலாளிக்கு ஜாமீன் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் வாலிபர் உணவு பார்சலுடன் மாணவியை சந்திக்க சென்றுள்ளர். மாணவியும் வாலிபரும் வீட்டுக்குள் சென்று சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதுகுறித்து அப்பகுதியினர் கட்டட தொழிலாளிக்கு தகவல் தெரிவித்தனர். அவசரமாக வீட்டுக்குச் சென்ற கட்டட தொழிலாளி, பூட்டிக்கிடந்த வீட்டு கதவை தட்டினார். வீட்டுக்குள் இருந்து மாணவியும், வாலிபரும் வெளியே வந்தனர். இதை பார்த்ததும் ஆத்திரத்தில் மகளை கண்டித்து தாக்கியுள்ளார் கட்டட தொழிலாளி. அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். அப்போது தந்தையுடன் மகள் கடுமையாக தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து, தனது மகளையும், வாலிபரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் கட்டட தொழிலாளி.

போக்ஸோ சட்டம்

காவல் நிலையத்துக்கு செல்லும் வழியில் தந்தையிடம் தகராறு செய்த மகள், 'நீ தான் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தாய் என போலீஸ் ஸ்டேஷனில் கூறி, உன் மீதே நான் போக்சோ வழக்கு கொடுப்பேன்' என தந்தையை மிரட்டி உள்ளார். மகள் பேசியதைக் கேட்டு கட்டட தொழிலாளி உடைந்து போனார். ஸ்டேஷன் வரை சென்றவர் புகார் எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு அழுதபடி வீட்டுக்குச் சென்று விட்டார். பிரச்சனை இருக்கும்போது மாணவியை தனியாக விட முடியாது என்பதால் அவரது தாயை போலீஸார் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். காவல் நிலையத்துக்குச் சென்ற மாணவியின் தாய் தனது மகளை அழைத்து சென்றார். புகார் எதுவும் இல்லாததால், மாணவியுடன் இருந்த வாலிபரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க

பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு

"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ... மேலும் பார்க்க

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க