Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Phot...
``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.
தவெக வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சில தந்திரங்களைச் செய்து பார்த்தார். ஆனால், நவ.5ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சிகள் அடிப்பட்டு போய்விட்டன.

இதற்கிடையில் கரூர் சம்பவம் தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41பேர் உயிரிழந்தாலும், கரூர் மக்களும் தமிழ்நாடு மக்களும் தவெக தலைவர் விஜய் மீது வைத்துள்ள அன்பும் பற்றும் குறையவே இல்லை.

இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புகிறார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தையே முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள் அது முடியவில்லை. மக்கள் விஜய் பக்கம்தான் இருக்கிறார்கள்.
கரூர் சம்பவம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உண்மையான குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். நீதி வெல்லும்." என்று பேட்டியளித்திருக்கிறார் அருண்ராஜ்.

















