செய்திகள் :

Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA விசாரணையில் அதிர்ச்சி

post image

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ம் தேதி மாலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை நடத்திய டாக்டர் உமர் மொகமத் காரிலேயே இறந்தார்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் மற்றும் முஜாமில் சகீல் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi Blast
Delhi Blast

இந்த விசாரணையில் தொடர்ந்து பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஜெய்ஸ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் வழிகாட்டுதலில் நடந்த இத்தாக்குதலை தொடர்ந்து அடுத்த கட்டமாக நாடு முழுவதும் நான்கு நகரங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 6 இடங்களிலும், நாட்டின் இதர பகுதியில் நான்கு நகரத்திலும் இத்தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்காக நான்கு கார்களை வாங்கி இருந்தனர். அந்த காரில் வெடிகுண்டுகளை எடுத்து சென்று வெடிக்க செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

அதோடு ஒவ்வொரு தாக்குதலுக்கும் தலா இரண்டு பேர் வீதம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பரிதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக கார்களில் தேவையான மாற்றங்களை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். அந்த நான்கு கார்களும் பல முறை விற்பனை செய்யப்பட்ட பழைய கார்கள் ஆகும்.

Delhi Blast: பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
Delhi Blast: பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

அவற்றை தேசிய புலனாய்வு விசாரணை ஏஜென்சி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட DL10 CK 0458 என்ற காரில் பின் சீட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நபரையும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு கார் வெடிகுண்டுடன் திங்கள் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களையும் வாங்கி இருந்திருக்கின்றனர்.

குருகிராம், நுஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து 20 குவிண்டால்களுக்கு மேல் NPK உரத்தை விலைக்கு வாங்கி இருந்திருக்கின்றனர்.

NPK உரம் என்பது நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), மற்றும் பொட்டாசியம் (K) ஆகியவற்றின் கலவையாகும். இந்த மூலப்பொருள் IED- வெடிகுண்டுகள் தயாரிக்க வாங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோடி - பின்னணி என்ன?

டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து திருமண போட்டோஷூட் நடத்திய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.டெல்லியைச... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்ட் டைவர்ஸ்'!

தம்பதியினர் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பயணத்தின் தொடக்கத்தையே பதட்டமாக மாற்றப்படும் என்பதற்காக தற்போது ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்ற ... மேலும் பார்க்க

UK: 10 ஆண்டுகள் காதலித்தவர் பிரிவு; ``செயற்கை கருத்தரிப்பு செலவை ஏற்க வேண்டும்'' - காதலி கோரிக்கை

இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், 38 வயதான ஆணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். எட்டு வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், ... மேலும் பார்க்க

``தெருநாய்களை பராமரிக்கச் சொல்லி சித்ரவதை'' - மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவன்

கணவன்–மனைவி சில நேரங்களில் எதற்காக சண்டையிடுகிறோம் என்று தெரியாமலே சண்டையிட்டு பிரிந்து விடுவர். சில நேரங்களில் சிறிய பிரச்சினையிலும் கணவன்–மனைவி விவாகரத்து செய்து விடுவார்கள். குஜராத்தில் ஒரு தம்பதிய... மேலும் பார்க்க

Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்' சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரி... மேலும் பார்க்க