ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?
``தெருநாய்களை பராமரிக்கச் சொல்லி சித்ரவதை'' - மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவன்
கணவன்–மனைவி சில நேரங்களில் எதற்காக சண்டையிடுகிறோம் என்று தெரியாமலே சண்டையிட்டு பிரிந்து விடுவர். சில நேரங்களில் சிறிய பிரச்சினையிலும் கணவன்–மனைவி விவாகரத்து செய்து விடுவார்கள். குஜராத்தில் ஒரு தம்பதியின் பிரிவிற்குத் தெருநாய்களே காரணமாக இருந்துள்ளன.
அகமதாபாத்தில் வசிக்கும் ரஞ்சித் பாட்டீல், 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் அவர், “என் மனைவி தெருநாய்கள் மீது அதிக அன்பு செலுத்த ஆரம்பித்தார். இதனால் தெருநாய்களை வீட்டிற்கு கொண்டு வரத் தொடங்கினார். ஆனால் நாங்கள் வசித்த கட்டிடத்திற்குள் தெருநாய்களை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும், கூடுதலாக தெருநாய்களை வீட்டிற்கே கொண்டு வந்தார்,” என்று கூறியுள்ளார்.

அந்த தெருநாய்களை சுத்தம் செய்து பராமரிக்கவும், அவற்றுக்கு சாப்பாடு செய்யவும் என்னிடம் மனைவி கேட்டுக்கொண்டார். தெருநாய்கள் படுக்கையை ஆக்கிரமித்தன. அவற்றில் ஒன்று என்னை கடித்தும் விட்டது. தெருநாய்களால் பக்கத்து வீட்டாருடன் தகராறு ஏற்பட்டது. இதனுடன் தொடர்பாக பக்கத்து வீட்டாரே போலீசில் புகார் செய்தனர்.
எனது மனைவி விலங்குகள் நல அமைப்பில் இணைந்திருந்ததால், அடிக்கடி அடுத்தவர்களைப் பற்றி புகார் செய்துவந்தார். இதனால் அடிக்கடி மனைவியுடன் போலீஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் செல்ல மறுத்தால், தன்னை அவமானப்படுத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம்பத்தியம் பாதிப்பு
இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு என்னால் தாம்பத்திய உறவில் கூட சரியாக ஈடுபட முடியவில்லை. 2007ம் ஆண்டு எனது மனைவி ரேடியோ ஜாக்கி ஒன்றைத் தொடங்கினார். அதில் பிராங்க் கால் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எனக்கு திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக பிராங்க் காலில் கூறினர்.
இதனால் வேலை செய்யும் இடத்தில் எனக்கு அவமானம் ஏற்பட்டது. எனவே பெங்களூருக்கு தப்பிச்சென்றேன். அப்படி இருந்தும், தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ரஞ்சித் பட்டேல் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணையின்போது தனது கணவர்தான் விலங்குகளிடம் பாசமாக இருக்கும்படி சொன்னார். அவர் இப்போது என்னை கைவிட்டுள்ளாார் என்று கூறி ரஞ்சித் பட்டேல் தெருநாய்களை எடுத்து கொஞ்சும் புகைப்படங்களையும் கோர்ட்டில் அப்பெண் தாக்கல் செய்தார்.
இதையடுத்து விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ரஞ்சித் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்.
இதில் தனது மனைவிக்கு ஒரே தவணையாக ரூ.15 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவி ரூ.2 கோடி கேட்டுள்ளார்.


















