Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
BB Tamil 9: "எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி'னு சொல்லாத"- விக்ரமை சாடிய பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கெமி போன்றோர்கள் இருக்கையில் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்று வெளியாகியிருந்த முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. சபரி, பார்வதியை கீழே தள்ளிவிட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகியிருந்தனர்.
இரண்டாவது புரொமோவில் பார்வதிக்கு கண்ணில் அடிபட்டிருந்தது. "இங்க எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லத்தான் செய்வேன். முதல்ல எல்லோரும் கேர் பண்ணேன்னு சொல்றாங்கள்ள... யார் கேர் பண்ணாங்க?

எல்லோரும் சேர்ந்து டிஸ்குவாலிபைடு'னு தான் சொன்னாங்க" என பார்வதி சபரியிடம் வாக்குவாதம் செய்திருந்தார்.
இதனைதொடர்ந்து, " அவன் அவ்வளவு உயரமா இருக்கான். அந்த பையனும் நானும் மோதும்போது உங்களுக்கு தெரிலையா? அப்போ உங்க கேர் எங்கப் போச்சு? என காட்டமாக கம்ருதீன் மற்றும் வினோத்திடம் பேசினார்.
தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், " இந்த வெர்ஷன் ஆஃப் விக்ரம் ரொம்ப புடிச்சிருக்கு. எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி'னு சொல்லிட்டு இருக்காத என பார்வதி விக்கல்ஸ் விக்ரமிடம் சண்டைப் போடுகிறார்.

"நான் சீரியஸ்ஸாவே எமோஷனலா காயப்படுத்துவேன் பாரு" என விக்ரமும் பார்வதியிடம் சொல்கிறார்.


















