செய்திகள் :

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

post image

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், விழாவின் நாயகனாக இருக்க வேண்டிய டிரெய்லரை விட, அக்‌ஷய்குமாரின் ஆடைதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

கிழிந்து தொங்கும் நீல நிற சட்டை, அதன் மேல் அதே போன்று கிழிந்த நிலையில் ஒரு பிளேஸர் ஜாக்கெட் ஆகியவற்றை அக்‌ஷய் அணிந்திருந்தார். இதில் கூடுதல் விசித்திரம் என்னவென்றால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வண்ணமயமான டை-களை அணிந்திருந்ததுதான். ஒன்று சிவப்பு நிறம், மற்றொன்று மஞ்சள் நிறம்.

கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது. ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன் நோக்கம். சமீபகாலமாக சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டைகளையும், அழுக்கான ஷூக்களையும் பல லட்சங்களுக்கு விற்று இந்த ட்ரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன.

அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

அக்‌ஷய் குமார் பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்துபவர். ஆனால், இந்த முறை அவர் வழக்கத்திற்கு மாறான, பரிசோதனை முயற்சியிலான ஃபேஷனை கையில் எடுத்துள்ளார். பேய்ப் படத்திற்கான ப்ரோமோஷன் என்பதால், சிதைந்து போன ஒரு பங்களாவைப் போல, சிதைந்த கிழிந்த ஆடைகளை அணிந்து படத்தின் கதைக்களத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர் முயன்றிருக்கிறார் போல...

இந்த ட்ரெண்ட் பொதுவாக மேலை நாடுகளில் `Runway' எனப்படும் பேஷன் ஷோக்களில் மட்டுமே அதிகம் காணப்படும். இதை ஒரு பொது விழாவிற்கு அக்‌ஷய் அணிந்து வந்ததுதான் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.

மொத்தத்தில், `பூத் பங்களா' டிரெய்லரை விட அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடைதான் பாலிவுட்டில் வைரல்!

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆன... மேலும் பார்க்க

"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். படத்தின... மேலும் பார்க்க

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் - மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு 'சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸா... மேலும் பார்க்க

SVC63: 'வாரிசு' பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்ட... மேலும் பார்க்க

Abhishek Bachchan: "அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!" - பாடமெடுக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் தற்போது ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்... மேலும் பார்க்க