GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு
GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு
2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதாவது, " தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் ஆர்.சி.பி அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி என்பது உங்கள் மீது விழும் கேள்விகளை மாற்றிக் கொண்டே இருக்கும்.
நீங்கள் ஒரு முறை வென்றபின், உங்களுக்கான சவால் உங்களால் வெல்ல முடியுமா? என்கிற இடத்திலிருந்து உங்களால் இந்த வெற்றியை தக்க வைக்க முடியுமா எனும் நிலைக்கு நகர்ந்து விடும்.

ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது. ஒரு தகுதிவாய்ந்த அணி செய்திருக்கும் மதிப்புமிக்க சாதனை இது" என்று பாராட்டி இருக்கிறார்.

















