செய்திகள் :

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு பண்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தமிழக ஆளுநரை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், “இந்த புதிய பயிற்சி மையம் தமிழர் கலாச்சாரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்கும்.

பறை என்பது நமது அடையாளம். இது பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பறையின் குறிப்புகளை காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியின் போது நமது கலாச்சாரத்தை அழிக்க முயன்ற போதிலும், நமது மூதாதையர்கள் இந்த கலையை பாதுகாத்தார்கள் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார்.

ஆளுநருக்கு பறை வழங்குதல்
ஆளுநருக்கு பறை வழங்குதல்

பிரதமர் மோடி வருவதற்கு முன், பத்ம விருதுகள் அதிகார மையத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் வாழும், சமூகத்திற்கு சேவை செய்யும் அறியப்படாத நல்ல மனிதர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மாற்றத்தின் விளைவாகவே வேலுவாசன் போன்ற வைர நபர்களை கண்டுபிடிக்க முடிந்தது.

பறை கலையை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே நமது குழந்தைகளுக்கு இந்த இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோல், IIT மெட்ராஸ் உட்பட உயர்கல்வி நிறுவனங்கள் தற்போது கர்நாடக இசையில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன. ஆனால் அங்கு பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பறை பண்பாட்டு மையம்
பறை பண்பாட்டு மையம்

“சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழ் கலாச்சார பாதுகாவலரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் இந்த மையத்திற்கு பெயரிடப்பட்டதை அவர் பாராட்டினார். ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கலாச்சார பாதுகாவலரின் பெயரை, நம் கலையை பாதுகாத்து வரும் உயிருள்ள உதாரணத்துடன் இணைப்பது மிகத் தனித்துவமானதாகும்.

பறை இசைத்த ஆளுநர்
பறை இசைத்த ஆளுநர்

மேலும், 2047-ல் சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, பறை ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவ வேண்டும்.

உலகத் தலைவர்களாக நாம் உயர்ந்து வரும் இந்த நேரத்தில், நமது இசை, கலாச்சாரம், பாரம்பரியத்திலும் உலகத் தலைவர்களாக இருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்ப... மேலும் பார்க்க

”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அ... மேலும் பார்க்க

Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி" - மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வர... மேலும் பார்க்க

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க... மேலும் பார்க்க