செய்திகள் :

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

post image

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும் விலையுயர்ந்த மாம்பழமாக கருதப்படுகிறது.

இந்த மாம்பழம் காய்க்கும் போது பச்சை நிறத்தில் இருக்கும். பழுக்கும் போது சிவப்பு நிறத்தில் மாறும். இதனால் மியாசாகி மாம்பழத்தை "சூரியனின் முட்டை" என்று கூறுவார்களாம்.

மியாசாகி மாம்பழங்கள் மற்ற மாம்பழங்கள் போல பயிரிடப்படுவதில்லை, பிரத்யோகமாக அமைக்கப்பட்ட பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்டு ஒவ்வொரு பழமும் வலையில் கட்டப்பட்டு, கனிந்தவுடன் தானாக விழும் வரை மரத்திலேயே விடப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் இந்த மாம்பழங்கள் ஆடம்பரப் பொருளாகவும், சிறப்புப் பரிசாகவும் கருதப்படுகின்றன. மியாசாகி வகை மாம்பழங்களில் 17% சர்க்கரை மூலக்கூறுகள் இருப்பதால் உலகின் அதிசுவையான மாம்பழமாக கருதப்படுகிறது.

இதனாலேயே இதன் விலையும் அதிகமாக உள்ளது, ஒரு ஜோடி மியாசாகி மாம்பழங்கள் வியக்கத்தக்க வகையில் ரூ.2.7 லட்சம் (தோராயமாக $3,000) விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த மாம்பழத்தின் புகழ் ஜப்பானின் எல்லையினை கடந்து இந்தியா வரை பரவியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், பீகாரைச் சேர்ந்த விவசாயி சுரேந்திர சிங், இந்தியாவில் மியாசாகி மாம்பழங்களை வெற்றிகரமாக பயிரிட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக விலை கொண்ட மாம்பழங்களில் ஒன்றாக மியாசாகி இருப்பது குறித்து பலரும் இவை வைரத்தை விட விலை உயர்ந்ததாக உள்ளது என ஒப்பிட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க