செய்திகள் :

Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்

post image

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அனுமதியளிக்காததால் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா - சீனா தாக்குதல்

இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த தாக்குதல் குறித்து எழுதியிருக்கிறார் நாரவனே. அதில் சீனப் படைகள் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியபோது, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு போன் செய்ததாகவும்... ஆனால், அவர்கள் காலம் தாமதித்து பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிலும், 'உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்' என்பதாக இருந்திருக்கிறது.

இதைக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பல ஆளும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

'எங்களுக்கு தான் உரிமை!'

இதையடுத்து, இந்தப் புத்தகத்தின் நகல்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளன... பெருமளவு ஷேர் ஆகவும் செய்கின்றன.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், தாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை என்றும், இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளது.

இதையொட்டி, வெளியாகாத புத்தகத்தின் நகல் ஆன்லைனில் ஷேர் ஆவதற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீஸார்.

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க

வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொ... மேலும் பார்க்க

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த... மேலும் பார்க்க

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த... மேலும் பார்க்க

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க