செய்திகள் :

Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

post image

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாகனங்கள், வீடுகள் எனக் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகளையும் இந்த வெள்ளம் காணாமல் போகச் செய்துவிட்டது.

நேபாள வெள்ள வீடியோக்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலானது. சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயிருக்க, ஒரேயொரு வீடு மட்டும் கம்பீரமாக நிற்கும் வீடியோ அது.

நேபாளம்
நேபாளம்

சுற்றி இருக்கும் அனைத்து வீடுகளும் தரைமட்டமாக, அந்தவொரு வீடு மட்டும் தப்பியது எப்படி என்கிற விளக்கமளிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவின் விளக்கம் இதோ...

“வெள்ளத்தில் அந்த வீடு தப்பித்திருப்பது ஏதோ அதிர்ஷ்டம் போலத் தோன்றலாம்.

ஆனால் அது எப்படித் தப்பித்தது என்பதற்குப் பின்னால் ஒரு துல்லியமான கட்டிடக் கலை அறிவியல் (Structural physics) இருக்கிறது.

முதலாவது, அதன் கட்டுமான முறை.

இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன.

இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து பலமான விசை தாக்கும்போது சுவர்கள் எளிதாகப் பிளந்து கூரை உள்நோக்கி விழுந்துவிடும்.

ஆனால், இந்த வீடு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டகத்தைக் (Reinforced Concrete Frame) கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கம்பிகள் அதன் தூண்கள், விட்டங்கள் மற்றும் அடித்தளத்தை ஒரே வலுவான எலும்புக்கூடு போல ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ளன.

இதனால், சேற்று வெள்ளம் வந்தடித்தபோது, கான்கிரீட் சட்டகம் அந்த மோதல் விசையைத் தாங்கிக்கொண்டு, அதை அப்படியே தரையின் கீழ் கடத்திவிட்டது.

இரண்டாவது, வீட்டின் அமைவிடமும், வடிவமும் முக்கிய காரணங்களாகும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மிகப்பெரிய பாறைகள் அதன் மையப் பகுதியில்தான் அதிக வேகத்துடன் பாயும்.

இந்த வீடு அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி, கொஞ்சம் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது.

மேலும் இதன் கச்சிதமான வடிவத்தால், வந்தடைந்த வெள்ளம் இரண்டாகப் பிரிந்து வீட்டின் இரு பக்கங்களிலும் விலகிச் சென்றிருக்கிறது.

அதுமட்டுமின்றி, முதலில் வந்து படிந்த சேறு ஒரு இயற்கைச் சரிவை உருவாக்கி, அதற்கு அடுத்து வந்த அதிவேக வெள்ள அலைகளை வீட்டின் மீது மோதவிடாமல் மேல்நோக்கி விலக்கிவிட்டுவிட்டது.”

சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் -... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எ... மேலும் பார்க்க

கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றன... மேலும் பார்க்க

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டுயானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள... மேலும் பார்க்க

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்ல... மேலும் பார்க்க

நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குட... மேலும் பார்க்க