செய்திகள் :

RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

post image

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் கலந்துகொண்டார். அன்றைய போட்டியில் ஆடும் லெவனில் கூட இல்லாத அவர் செய்தியாளர் சந்திப்பில் அணி சார்பாக கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பிலிப்ஸ் காட்டிய கோபம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RCB vs GT
RCB vs GT

இது ஒரு மோசமான கேள்வி!

``ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 254 ரன்கள் குவித்தபோதே, குஜராத் அணி மனதளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதா?" என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த பிலிப்ஸ், உடனடியாக காட்டமான பதிலைக் கொடுத்தார்.

"அது ஒரு முட்டாள்தனமான கேள்வி. உண்மையிலேயே மிக மிக முட்டாள்தனமான கேள்வி. 'சரி, இந்தப் போட்டியை நாம் கைவிட்டுவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு எந்த வீரரும் களத்திற்குள் செல்வதில்லை. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இது ஒரு மிக மோசமான கேள்வி. நாங்கள் களத்திற்குச் சென்று எங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினோம். துரதிர்ஷ்டவசமாக, 250 ரன்களைத் துரத்தும்போது எல்லாம் சரியாக அமைய வேண்டும். ஆனால் எங்களுக்கு அப்படி அமையவில்லை," என்று சீறினார்.

ஸ்கோர்போர்டின் அழுத்தம்!

இந்தப் போட்டியில் குஜராத் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததுதான் இந்த சரிவுக்கு முக்கியக் காரணம். இமாலய இலக்கின் அழுத்தம் குறித்துப் பேசிய பிலிப்ஸ், "250 ரன்களை சேஸ் செய்யும்போது மிகப்பெரிய ஸ்கோர்போர்டு அழுத்தம் இருக்கும். இதுவரை சில அணிகளே இதைச் சாதித்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு முறை இதைச் செய்திருப்பது அபாரமானது. ஒருவேளை அவர்கள் அதை எளிதாகத் தோன்ற வைத்திருக்கலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. சில நேரங்களில் சில விஷயங்கள் அப்படித்தான் அமையும்," என்றார்.

அணியின் கூட்டுப் பொறுப்பு!

பின்னர், போட்டியில் விளையாடாத நீங்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பது வித்தியாசமாக இல்லையா? என மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்த பிலிப்ஸ், "இல்லை, அது பரவாயில்லை. நாங்கள் அனைவரும் ஒரு அணியின் அங்கம்தான். ஊடகங்களிடம் பேசுவதும் எங்கள் கூட்டுப் பொறுப்பு. சில நேரங்களில், விளையாடாத ஒருவரின் வெளிப்பார்வை அணிக்கு உதவும். குறிப்பாக, அடுத்ததாக எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டிய வீரர்கள் மனதளவில் தயாராக இது அவசியம். எங்கள் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா சொல்வது போல, 'சில் பில்' எடுத்துக்கொண்டு அவர்கள் அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும்," என்று கூறினார்.

IND vs Pak: இந்தியா - பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த... மேலும் பார்க்க

"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், சட்டோகிராம் பகுதியில் தன்னை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ... மேலும் பார்க்க

'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவி... மேலும் பார்க்க

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க

'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்... மேலும் பார்க்க

"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

'ஈசாலா கப் நம்தே' என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர... மேலும் பார்க்க