செய்திகள் :

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

post image

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஐநா
ஐநா

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள்

ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

"உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்" என்று வருந்தியுள்ளார்.

ஐநா சபை
ஐநா சபை

திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும்.

வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம்

இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும்.

இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நட... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,"பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்ட... மேலும் பார்க்க

``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது"- தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவி... மேலும் பார்க்க

TVK: "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்..." - திமுக அரசு மீது விமர்சனம்

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவால் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர்... மேலும் பார்க்க

ஏப்ரலில் வீட்டுவசதி கணக்கெடுப்பு; சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? - மத்திய அரசு தகவல்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக தொடங்கும் என்று மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) தெரிவித்துள்ளது.இதுக... மேலும் பார்க்க

Telangana: `இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி?' - நடந்தது என்ன? முழுத் தகவல்!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றி... மேலும் பார்க்க