செய்திகள் :

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. மேயர் இதுவரை சிவகாசி மாநகராட்சி பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில்லை,” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சிவகாசி மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சி கூட்டம்

அதேபோல், 9வது வார்டு கவுன்சிலர் சுதாகரன் பேசுகையில், “மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானவை. இவ்வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், அது ஆணையர் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

மேலும், 7 மற்றும் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, “மாநகராட்சியில் வீட்டு வரி ரசீது போடுவதற்கே 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகின்றது. இதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வெளிக்கொணர வேண்டும்,” எனக் கூறினர்.

சிவகாசி மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சி கூட்டம்

மாநகராட்சியின் அலட்சியம் மற்றும் லஞ்சம் காரணமாக திமுக அரசுக்கு மக்கள் மனதில் கெட்டபெயர் ஏற்பட்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்,” என அவர்கள் எச்சரித்தனர்.

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.தென் கொரிய... மேலும் பார்க்க

`சிலையா, அரசியலா?’ - பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது யார்?

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது சுமார் 2,500 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர்... மேலும் பார்க்க

``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.“கலுங்கு சௌகரித சம்வாத ய... மேலும் பார்க்க

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தே... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்ச... மேலும் பார்க்க

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.JNU Students Electionடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ... மேலும் பார்க்க