செய்திகள் :

``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை

post image

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

“கலுங்கு சௌகரித சம்வாத யாத்ரா” என்ற பெயரில் மக்களுடன் நட்பாக உரையாடும் நிகழ்ச்சியை ஏற்கனவே நடத்தினார். இப்போது வளர்ச்சி குறித்து மக்களுடன் பரஸ்பரம் கருத்து பரிமாறும் விதமாக “எஸ்.ஜி. காஃபி டைம்” (சுரேஷ் கோபி காஃபி டைம்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

எஸ்.ஜி காஃபி டை நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ்கோபி
எஸ்.ஜி காஃபி டை நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ்கோபி

திருச்சூர் மாநகராட்சி ஸ்டேடியத்தில் நடந்த எஸ்.ஜி. காஃபி டைம் நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசுகையில்,

“கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டாமல் நான் மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்டு வரமாட்டேன்.

ஆலப்புழாவில் எயிம்ஸ் கொண்டு வர முயற்சிப்பேன். கேரள மாநிலத்திற்கு எயிம்ஸ் மருத்துவமனை வழங்கப்படுமெனில், ஆலப்புழாவில்தான் அது அமைக்கப்பட வேண்டும். கேரளாவில் மிகவும் பின்தங்கி இருக்கும் இடம் இதுதான்,” என்றார்.

கேரள மாநிலத்தில் ஆலப்புழாவும் இடுக்கியும் தான் மிகவும் பின்தங்கி உள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களும் முன்னேறவே இல்லை. புவியியல் ரீதியாக எயிம்ஸ் மருத்துவமனை இடுக்கியில் அமைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ஆலப்புழாவில்தான் எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

திருச்சூர் தொகுதி மக்கள்தான் என்னை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தனர். திருச்சூருக்காக மட்டுமே செயல்படும் எம்.பி.யாக நான் இருக்க மாட்டேன்; கேரளாவுக்காக செயல்படும் திருச்சூர் மக்களின் எம்.பி.யாக இருப்பேன் என அன்று முதலே கூறி வருகிறேன்.

சுரேஷ்கோபி

ஆலப்புழாவில் எயிம்ஸ் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால், திருச்சூரில் எயிம்ஸ் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். சரியான நேரத்தில், சரியான இடத்தில் எயிம்ஸ் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நானும் அதை குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்லுகிறேன் - 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு வர வேண்டுமானால், கேரளாவில் எங்காவது ஒரு இடத்தில் எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டிவிட்டு தான் உங்கள் முன்னால் நான் வருவேன்,” என்றார்.

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். கூட்டத்தில் பேசிய 6-வது வ... மேலும் பார்க்க

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தே... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்ச... மேலும் பார்க்க

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.JNU Students Electionடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ... மேலும் பார்க்க

"நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம்" - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர்.நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரா... மேலும் பார்க்க