செய்திகள் :

தஞ்சாவூர்: பள்ளிக்கு செல்லும் வழியில் ஆசிரியை நடுரோட்டில் வெட்டிக் கொலை; இளைஞர் வெறிச்செயல்

post image

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டர் வேலை செய்து வந்தார். ஒரே சமூகத்தை சேர்ந்த காவியாவும், அஜித்குமாரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 நிச்சயத்தார்த்தம் ஆன காவியா
நிச்சயத்தார்த்தம் ஆன காவியா

காவியா, அஜித்குமாரை காதலித்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. நீ டீச்சர் அவன் பெயிண்டர் இது ஒத்து வராது என சொல்லியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புண்ணியமூர்த்தி தன் மகள் காவியாவை வற்புறுத்தி, உறவினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பேசியுள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த தகவல் அஜித்குமாருக்கு தெரியவில்லை என்கிறார்கள்.

தனக்கு நிச்சயத் தார்த்தம் நடந்ததை காவியா, அஜித்குமாரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தொடர்ந்து அஜித்குமாரிடம் போனில் பேசி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இருவரும் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை காவியா அஜித்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் நிச்சயத்தார்த்த போட்டோக்களையும் அஜித்குமாருக்கு அனுப்பியுள்ளார்.

கொலை செய்த அஜித்குமார்
கொலை செய்த அஜித்குமார்

அப்போதே இருவருக்கும் வாக்கு வாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது டூவீலரில் வழக்கும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார் காவியா. மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவை அஜித்குமார் வழி மறித்துள்ளார்.

எனக்கு ஸ்கூலுக்கு மணியாச்சு நான் போகணும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என காவியா கூறியதாக தெரிகிறது.

இதனால் காவியா மீது ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் வெட்டி குத்தி கொலை செய்துள்ளார்.

சாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித்குமார் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.

மரணம்
மரணம்

இந்தகொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார், `13 வருடங்களாக காதலிச்சோம். இப்ப திடீர்னு வேற ஒருவருடன் நிச்சயத்தார்த்தம் நடந்துள்ளது. காவியாவை வேறு ஒருவர் திருமணம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காவியாவும் இதற்கு எப்படி சம்மதிச்சார்னு தெரியலை அதனால் கொலை செய்து விட்டேன்' என போலீஸிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை

கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந... மேலும் பார்க்க

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க