செய்திகள் :

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் கிருத்வீகா முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். சுரேஷ்குமாரின் மனைவி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வாளியில் இருந்த தண்ணீரில் தலைகீழாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கிருத்வீகா முத்ரா

பரிசோதனை செய்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் மருத்துவர் குழந்தையை பரிசோதித்தபோது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ்குமார் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வயது குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாளியில் விழுந்து இறந்த சம்பவம் நத்தம்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமை... மேலும் பார்க்க

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக... மேலும் பார்க்க

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ள... மேலும் பார்க்க

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்... மேலும் பார்க்க