செய்திகள் :

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ - இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

post image

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிலட்சுமி (7) மரணமடைந்தார். மற்றொரு குழந்தையான யதுகிருஷ்ணா (4) மரணமடைந்த தகவல் சற்று தாமதமாக தெரியவந்தது.

விபத்தில் மரணமடைந்த குழந்தை ஆதிலட்சுமி

அந்த ஆட்டோவில் பயணித்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான் அதில் யதுகிருஷ்ணா(4) என்ற குழந்தையை காணவில்லை என பெற்றோர் கதறினர். இதையடுத்து விபத்து நிகழ்ந்த ஓடையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தேடினர். நேற்று இரவு இறந்த நிலையில் யது கிருஷ்ணாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த குழந்தைகளின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

பலியான யதுகிருஷ்ணா

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், "ஆதிலட்சுமியும், யது கிருஷ்ணாவும் ஆட்டோவில் இருந்து தெறித்து வெளியே விழுந்துள்ளனர். ஆதிலட்சுமி மீது ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், காப்பாற்ற முடியவில்லை. யதுகிருஷ்ணா தெறித்து ஓடை தண்ணீரில் விழுந்துவிட்டார். யதுகிருஷ்ணாவை யாரும் கவனிக்கவில்லை. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக நினைத்தனர். யதுகிருஷ்ணாவின் பெற்றோர் கூறியபிறகே சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த குழந்தையை தேடத்தொடங்கினர். ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும்" என்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமை... மேலும் பார்க்க

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக... மேலும் பார்க்க

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ள... மேலும் பார்க்க