செய்திகள் :

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

post image

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள்ளை சூரஜ். இவர் சிபிஎம் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்ததற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சிபிஎம் கட்சியினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூரஜ் கொலை வழக்கில் சிபிஎம் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.டி. நிசார் அகமது இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் டிபி சந்திரசேகரன் என்பவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிகே ரஜீஷ் (45), முதல்வரின் செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பிஎம் மனோஜின் சகோதரர் மனோஜ் நாராயணன், ஈவி யோகேஷ் (45), ஷம்ஜித் (48), நெய்யோத் சஜீவன் (56), பிரபாகரன் (65), பத்மநாபன் (67), ராதாகிருஷ்ணன் (60), புதியபுரையில் பிரதீபன் (59) ஆகிய 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

10-வது குற்றவாளியான நாகாத்தன் கோட்டை பிரகாஷன் (56) முக்கிய சாட்சியாக மாறியதால் விடுதலை செய்யப்பட்டார். 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பாலியல் வன்கொடுமை முயற்சி: ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்!

இந்த வழக்கு விசாரணையில் முதலில் 10 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். பின்னர், டிகே ரஜீஷ் வாக்குமூலத்தின்படி மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில், பிகே சம்சுதீன், டிபி ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர்.

கொலை நடந்தபோது சூரஜ் மீது முதலில் வெடிகுண்டை வீசிய குற்றவாளிகள் பின்னர் கோடாரி, கத்திகளால் அவரைத் தாக்கியதாக சிறப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

மேலும், கொலைக்கு 6 மாதங்களுக்கு முன்னரே சூரஜை கொலை செய்ய இவர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது நடைபெற்ற தாக்குதலில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சூரஜ் படுக்கையில் இருந்தார். பின்னர் குணமாகி மீண்டு வந்த அவரை மீண்டும் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதையும் படிக்க | நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!

”சூரஜ் கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்த பின்னர் அவரது கல்லறையைக் கூட குற்றவாளிகள் இருமுறை இடித்தனர். இவர்களுக்கான தண்டனை சூரஜின் பெற்றோரின் வேதனையை சற்றே தணிக்கும்” என்று வழக்குரைஞர் பத்மராஜன் தெரிவித்தார்.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க