செய்திகள் :

"இந்தியாவைப் பார்த்து எதிரணிகள் பயப்படும் காலம் இருந்தது, ஆனால் இப்போது"- தினேஷ் கார்த்திக் காட்டம்

post image

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ind vs sa match
ind vs sa match

"இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள்.

ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருக்கிறார்கள்.

கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது.

இது இந்திய கிரிக்கெட்டிற்கு மோசமான காலம்.

உடனடி தீர்விற்கான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும்.

எனக்குத் தெரிந்தவரை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள்.

இந்த டெஸ்ட் தொடரில் 100 ரன்களுக்கு மேல் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள்.

தினேஷ் கார்த்திக்

ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் விளாசியிருக்கின்றனர்.

இந்திய அணியால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இப்படியான சரிவு ஏற்படும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு முதல் இரண்டு எடிஷனில் (2019-21, 2021-23) இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி.கடந்த எடிஷனில்(2023-25)இறுதிப் போட்டிக்குசெல்ல சுலபமான வாய்ப்பிருந்தும் சொந்த ம... மேலும் பார்க்க

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 - 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆ... மேலும் பார்க்க

Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண... மேலும் பார்க்க

IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம்" - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்... மேலும் பார்க்க

IND v SA: "அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அ... மேலும் பார்க்க

IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி... மேலும் பார்க்க