செய்திகள் :

ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா?

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள சூளகிரி தாலுகாவுக்குஉட்பட்ட கிராமமான உத்தனப்பள்ளியில், `டாடா எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னனு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குப் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் கிராமத்தில் சுமார் இருபதாயிரம்பேர் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’ கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், `இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.

விடியல் ரெசிடென்சி

இந்த நிலையில், அந்த பெண்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல், தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறது. அதாவது, விடுதியின் எட்டாம் பிளாக்கில் இருக்கும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும்கூறி அங்கு பணிபுரியக்கூடிய பெண்களே விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெண்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பினர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உத்தனப்பள்ளி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக பெண் பணியாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (வயது 22) என்பவரைக் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில், இப்படி எடுக்கப்பட்ட வீடியோவை நீலுகுமாரி தனது ஆண் நண்பரான சந்தோஷ் என்கிற சதீஷ்குமாருக்கு பகிர்ந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. அவரைப் பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீஸாரும், பெங்களூருவுக்கு விரைந்திருக்கின்றனர்.

காவல்துறை செய்திக்குறிப்பு

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவின்பேரில், பெண் போலீஸாரைக்கொண்ட 10 குழுவினர் ஒவ்வொரு அறையாக சென்று மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து, கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரையிடம் கேட்டபோது, ``கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அந்த மகளிர் விடுதிக்கு பெண் போலீஸாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். தனிப்படை அமைத்தும், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகே தகவல்கள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

திருப்பூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தந்தை, இளைஞர் கைது

திருப்பூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவருக்கும் திருப்பூரில் தங்கி பிரிண்டிங் வேலை செய்து வரும் சேலத்தைச் சேர்ந்த இளவரசன் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்ந... மேலும் பார்க்க

அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி. போலீஸ் அதிகாரி!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ரிஷிகாந்த் சுக்லா. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆன சுக்லா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கும் மேலாக சொத்துகள... மேலும் பார்க்க

``திருமணத்தின் புனிதம், அடக்குமுறை துன்பத்தை தாங்கிக்கொள்வதில் இல்லை''- உயர்நீதிமன்றம் உத்தரவு

"கணவரின் வயது மூப்பின் காரணமாக தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என்று, ரத்து செய்யப்பட்ட தண்டனையை மீண்டும் வழஙகி உத்தரவிட... மேலும் பார்க்க

``மீன்பிடித்து படிக்கவைத்த காதலன்; வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி'' - போலீஸ் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ்–புஸ்பரதி ஆகியோரின் மகள் கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணை க... மேலும் பார்க்க

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.தம்பத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.... மேலும் பார்க்க