செய்திகள் :

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, அந்தப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டியிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் காயமடைந்தார்.

அதனால், மீண்டும் கேப்டன் பதவியைத் தொடர்ந்தார் தோனி. அதே நேரம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

CSK Captain Dhoni
CSK Captain Dhoni

அதைத் தொடர்ந்து தோனி ஓய்வை அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தோனி, ``2026-ம் ஆண்டில் என் உடல்நிலையைப் பொறுத்து அப்போது முடிவெடுப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் பெரும் விவாதமானது.

இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ``தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவில்லை. அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது எனக்குத் தெரியாது.

அவரிடம் வேண்டுமானால் கேட்டுவந்து சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஒருசில வாரங்களில் ஐபிஎல் ஏலம் நடக்கவிருக்கும் நிலையில், சிஎஸ்கே செயல் அதிகாரியின் இந்த வார்த்தைகள் தோனி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர... மேலும் பார்க்க

``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜெமிமா

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட... மேலும் பார்க்க

``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றா... மேலும் பார்க்க

'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' - கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்

முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதர... மேலும் பார்க்க

சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடு... மேலும் பார்க்க