செய்திகள் :

"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

post image

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.

எம்.ஜி.ஆர், கலைஞர்

கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.

அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும்.

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர்.

அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை." என்றார்.

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க