செய்திகள் :

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கில் தொடங்கவிட்டுவிட்டதாக சர்மாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சர்மாவின் உடல் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது லக்னோவில் மேலும் ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமான மான்சி என்பவர் கடந்த 2024ம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த ரஜபுத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரஜபுத்தும் சோசியல் மீடியா பிரபலம் ஆவார்.

மான்சி - ரஜபுத்
மான்சி - ரஜபுத்

ரஜபுத்திற்கு இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். லக்னோவில் உள்ள தனது கணவன் வீட்டில் மான்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கார் கேட்டு கொன்றுவிட்டனர்

மான்சியை கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டதாக மான்சியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''திருமணத்தின் போது ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்தோம். ஆனால் அவை ரஜபுத் குடும்பத்திற்குத் திருப்தியளிக்கவில்லை.

திருமணமான நாளில் இருந்து அவர்கள் அதிக வரதட்சணை கோரி வந்தனர். குறிப்பாக ஒரு கார் கேட்டனர். திருமணமான நாளில் இருந்து போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக அவமானப்படுத்தி சித்ரவதை செய்து வந்தனர்.

அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மான்சியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர். சித்திரவதை பற்றி மான்சி எங்களிடம் தெரிவித்தார். எனவே சமாதானம் செய்வதற்காக நாங்கள் பல முறை லக்னோ சென்று வந்தோம். ஆனால் இப்போது எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறுகின்றனர்.

அவர்கள் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போன்று ஜோடித்துள்ளனர்'' என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரஜபுத் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நேரில் அழைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்ற... மேலும் பார்க்க

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வ... மேலும் பார்க்க

மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்... மேலும் பார்க்க

மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கணவன் கைது

மும்பை தேவ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அர்பாஸ் செய்யத். பல்வேறு கிரிமினல் வழக்குகள் அர்பாஸ் மீது இருக்கின்றன. உள்ளூரில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான். அர்பாஸ் தனது வீட... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவி... மேலும் பார்க்க