செய்திகள் :

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

post image

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
கைது

சென்னை காசிமேடு பவர்குப்பம் 2-வது தெருவைச் சேர்ந்த சகாயராஜ் - திலகவதி தம்பதிக்கு ஏற்கனவே ஆண், பெண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பிறந்த குழந்தையை யாரிடமாவது விற்பனை செய்ய நினைத்த இத்தம்பதியினர் தண்டையர்பேட்டையைச் சேர்ந்த பிரதீபாவிடம் தெரிவித்துள்ளனர். அதோடு பிரதீபா, தனக்கு தெரிந்த காசிமேட்டைச் சேர்ந்த வெண்ணிலா, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா ஆகியோருடன் ஆலோசனை செய்து குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை தேவைப்படுவதை அறிந்து அவர்களிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதில் 3 லட்சத்தை சகாயாராஜ்-திலகவதி தம்பதியினரிடம் கொடுத்துவிட்டு மீதி 80 ஆயிரம் ரூபாவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.

இது குறித்து காசிமேடு காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து விசாரணையில் இறஙகியவர்கள், சம்பவம் நடந்தததை உறுதி செய்த பின் திலகவதி, பிரதீபா உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து குழந்தைகள் நலக் குழுவினர் ஒப்படைத்தனர்.

குழந்தை விற்பனை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கிருஷ்ணகிரி சென்று குழந்தையை வாங்கிய ராமன் - மாதம்மாள் தம்பதியினருடன், அவர்களுக்கு உதவிய கவிதா, ஜெயலட்சுமி ஆகியோரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.!

`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மதுப... மேலும் பார்க்க

பாராமதி விமான நிலையம்: அடிக்கடி VIP-க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட வசதி இல்லாத நிலை!

பாராமதி விமான நிலையத்தின் ஈடுதளம் அருகே நேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதிச்சடங்கில் பங்கேற... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர்; டீசல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 47). இவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்குத் திருமணமாகி பாண்டீஸ்வர... மேலும் பார்க்க

``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதியில் நெல்லை மக்கள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திரு... மேலும் பார்க்க

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க