செய்திகள் :

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

post image

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணமானது.

தற்கொலை செய்த குடும்பத்தினர்

இலக்கிய செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு எக்ஷிதா ஏஞ்சல் என்கிற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அருகில் உள்ள பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்
புற்றுநோய்

முதல் கட்ட விசாரணையில் இலக்கியா கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகாத வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு கமலேஷ் பதிவு செய்த வீடியோவில், “என் மனைவி மார்பக புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் எங்களுக்கு என்ன செய்தென்று தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறோம். நாங்கள் இறந்த பிறகு எங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கமலேஷ்

இதற்கான செலவுத் தொகையான ரூ.50,000 ஏற்கனவே ஆலயத்திற்கு அனுப்பிவிட்டோம். என்னுடைய சேமிப்புப் பணத்தையும் ஆலயத்திற்கு எழுதிவிட்டேன். பணியில் இறந்ததால் கிடைக்கும் பணத்தை தமிழ்நாடு ஏழை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க