செய்திகள் :

சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!

post image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது பெண்கள் குளித்துவிட்டு உடைகளை மாற்றியிருக்கிறார்கள். அதை மர்ம நபர் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதைக் கவனித்த 29 வயது இளம்பெண், கூச்சலிட்டிருக்கிறார். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். இளம்பெண், விவரத்தைக் கூறியதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்தவரைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். அப்போது அந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து அவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். போலீஸாரின் விசாரணையில் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பெரியதுரை (40) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைதுசெய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதான பெரியதுரை

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியதுரை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று நண்பர்களைச் சந்திக்க அவர் சென்னை வந்த இடத்தில்தான் பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்

டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாத... மேலும் பார்க்க

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்த... மேலும் பார்க்க

சென்னை: Trible Murder Case; மூன்று பேர் கைது - கொலைக்கான காரணம் தெரியாமல் திணறும் போலீஸ்

சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் ... மேலும் பார்க்க

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத்... மேலும் பார்க்க

`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்

மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இர... மேலும் பார்க்க

"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க