செய்திகள் :

சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!

post image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது பெண்கள் குளித்துவிட்டு உடைகளை மாற்றியிருக்கிறார்கள். அதை மர்ம நபர் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதைக் கவனித்த 29 வயது இளம்பெண், கூச்சலிட்டிருக்கிறார். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். இளம்பெண், விவரத்தைக் கூறியதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்தவரைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். அப்போது அந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து அவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். போலீஸாரின் விசாரணையில் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பெரியதுரை (40) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைதுசெய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதான பெரியதுரை

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியதுரை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று நண்பர்களைச் சந்திக்க அவர் சென்னை வந்த இடத்தில்தான் பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க