செய்திகள் :

சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு

post image

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணிநிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகிலும், மெரினா கடற்கரையில், சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகிலும் சாலைகளைச் சுத்தம் செய்து தொடர் போராட்டத்தை நடத்தி கைதாகினர். 

இந்நிலையில் இன்றுடன் (நவ 8) தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. இன்று சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பெரும் போராட்டம் நடைபெறும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - ரிப்பன் மாளிகை - போலீஸார்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - ரிப்பன் மாளிகை - போலீஸார்

இதை அறிந்த காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு மீண்டும் கூடி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பைப் போட்டிருக்கிறது. இன்று அதிகாலை முதலே சென்னை ரிப்பன் மாளிகையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வ... மேலும் பார்க்க

தமிழக Amni Busகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம்; "கேரளாவுக்கு சவாரி இல்லை" - உரிமையாளர்கள்; என்ன நடந்தது?

சென்னை, கோவை, மதுரை எனப் பல பகுதியிலிருந்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று (07.11.2025) கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்க... மேலும் பார்க்க

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.அதிமுகவில் இருந்து வ... மேலும் பார்க்க