செய்திகள் :

தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையில் விவசாயிகள்

post image

டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வயல்களில் மழை நீர் தேங்கியதால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்பைச் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால்

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தில் உள்ள வேதபுரி வடிகால் வாய்க்காலில் தொடர் மழையில் அதிக அளவிலான தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு காரணமாக வாய்க்காலில் இருந்து தண்ணீர் அருகில் இருக்கும் வயல்களில் புகுந்து கடல்போல் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி நடவு செய்து ஒரு மாதங்கள் ஆகிறது. வயல்களில் வெள்ளம் தேங்கியதால் ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கின.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "வேதபுரி வாய்க்காலை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனப் பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளோம். அதன் பிறகுகூட வேதபுரி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வயலுக்குள் புகுவது தொடர்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் வேதபுரி வாய்க்கால் முழுவதும் வேகமாக மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. கரைகள் பலம் இல்லாததால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் அப்பகுதியில் உள்ள நடவு செய்யப்பட்ட வயல்களில் சூழ்ந்தது.

மழை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு

இதனால், நடவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயலில் சுமார் 3 அடி அளவில் வாய்க்காலில் இருந்து வந்த தண்ணீர் தேங்கி நிற்பதால் வயல் தற்போது கடல் போல் மாறி விட்டது. நெற்பயிர் முழுவதும் மூழ்கியதால் அழுகும் நிலையும் மகசூல் பாதிப்பும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவு செய்வது முதல் அறுவடை வரை ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 வரை செவு செலவாகும்.

தற்போது கதிர் விடும் தருணத்தில் பயிர் தண்ணீரில் மூழ்கிவிட்டது. வாய்காலை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தியிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. அரசு, அதிகாரிகளும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன் ஆர்.கே.ஶ்ரீசுதர்சன்,அவினாசி,திருப்பூர்.9443775416பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மைசூர் மல்லி, பொன்ன... மேலும் பார்க்க

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துற... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கோவில், வ... மேலும் பார்க்க

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்... மேலும் பார்க்க

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை - கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?

கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து வி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பருவம் தவறிய கனமழை; திராட்சை விவசாயம் 70% பாதிப்பு - உயிரை மாய்த்த 9 விவசாயிகள்

நாசிக் - திராட்சை தலைநகர் பாதிப்பு மகாராஷ்டிராவின் நாசிக், புனே, சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் திராட்சை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிக அளவில் இ... மேலும் பார்க்க