செய்திகள் :

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

post image

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் திடீரென நூற்றுக்கணக்கான தேனீக்கள் அங்கன்வாடிக்குள் நுழைந்து குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது.

இதனால் குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். உடனே சமையல் அறையில் இருந்து ஓடி வந்த கஞ்சன் பாய் அங்கு கிடந்த தார்பாயை எடுத்து குழந்தைகளின் உடலில் சுற்றி ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்து விட்டார். ஆனால் கஞ்சன் பாயை தேனீக்கள் கொட்டிக்கொண்டிருந்தது.

அதனைப்பற்றி கவலைப்படாமல் 20 குழந்தைகளையும் அவர் பத்திரமாக வெளியில் கொண்டு வந்து விட்டார். அதன்பிறகு அவர் தேனீக்களின் கடியால் அப்படியே மயங்கிவிழுந்தார். சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் கஞ்சன் பாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துபோனார். அவரது உடம்பு முழுவதும் தேனீக்கள் கடித்திருந்த தடம் இருந்தது. கஞ்சன் பாய் உடல் மருத்துவமனையில் இருந்து கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டபோது ஒட்டுமொத்த கிராமத்தினரும் அமைதியுடன் இரங்கல் தெரிவித்தனர். அங்கன்வாடி அருகில் உள்ள மரத்தில் இருந்து தேனீக்கள் வந்தாக கூறப்படுகிறது.

கஞ்சன் பாய் அங்கன்வாடி சமையல்காரராக மட்டுமல்லாது மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தலைவராகவும் இருந்தார். அவரது துணிச்சலான செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கஞ்சன் பாய் கணவருக்கு பக்கவாதம் வந்துள்ளது. இதனால் கஞ்சன் பாய்தான் தனது குடும்பத்தை கவனித்து வந்தார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் ... மேலும் பார்க்க

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க