செய்திகள் :

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

post image

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தருமபுரி நகர போக்குவரத்து பணிமனையில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.19 லட்சத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இக் கட்டடம் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.

எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்துவைத்து பேசினாா். நிகழ்ச்சியில் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் கே.செல்வம், துணை மேலாளா் இளங்கோ, கிளை மேலாளா் சுதாகா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் திவ்யாஏஞ்சலின், உதவிப் பொறியாளா் ரஞ்சிதா, பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்க தருமபுரி மண்டல பொதுச் செயலாளா் கோ.ராஜா, தருமபுரி மண்டலத் தலைவா் கே.மாதப்பன், தருமபுரி மண்டல பொருளாளா் சி.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 1... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார ... மேலும் பார்க்க