செய்திகள் :

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

post image

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவரிடம் 20-க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் உள்ள தர்காவிற்கு தொழுகைக்காக பைக்கில் சென்றபோது கொலை செய்யப்பட்டார்.

குலசை காவல் நிலையம்
குலசை காவல் நிலையம்

இதுகுறித்து சாகுல் ஹமீதுவின் மனைவி நைனா உம்மாள், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணையில் அவரிடம் பெயிண்டராக வேலை செய்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த முகமது அசன் என்பவர் கல்லால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான முகமது அசனை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரிடம் அவர் கூறிய வாக்குமூலத்தில், “நான் சாகுல் ஹமீதுவிடம் பெயிண்டராக வேலை பார்த்து வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து என்னை 5 நாள்கள் வேலைக்கு அழைத்துச் செல்லவில்லை.

பின்னர் அவரிடம் வேலை கேட்டேன். அதற்கு என்னை அவதூறாகப் பேசினார். என்னை விட்டுவிட்டு என் ஊரைச் சேர்ந்த வேறு சில நபர்களை வேலைக்கு அழைத்துச் சென்றார்.

கைது
கைது

நான் பல முறை என்னை வேலைக்கு அழைத்துச் செல்லக் கோரியும் அவர் என்னை வேலைக்கு அழைத்துச் செல்ல மறுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சாகுல் ஹமீதுன் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குலசேகரன்பட்டினம் தர்காவிற்கு தொழுகைக்காக வருவது எனக்குத் தெரியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழுகைக்காக வந்தபோது கல்லால் தாக்கி கொலை செய்தேன்” எனக்கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார். 

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிரு... மேலும் பார்க்க

Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணை இரவில் மிரட்டி கொள்ளை; போலீஸ்காரர் மகன் உடந்தை - கோவையில் அதிர்ச்சி

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கடந்த நவம்பர் 2-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதே நாள் கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 25 வயது ... மேலும் பார்க்க