செய்திகள் :

தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்

post image

எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில் வசிப்பவர் மனீஷா (25). இவருக்குக் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

மனீஷாவிற்கு சிறுவயதில் இருந்தே எறும்புகளைக் கண்டால் பயம். அதனால் அவரது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இதற்காக கவுன்சிலிங் பெற்றுள்ளார். சம்பவத்தன்று காலையில் அவரது கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார்.

உயிரிழந்த மனீஷா
உயிரிழந்த மனீஷா

மனீஷா தனது மகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வீட்டைச் சுத்தம் செய்த பிறகு வந்து அழைத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு சென்றவர் அதன் பிறகு குழந்தையைக் கூப்பிட வரவில்லை.

அவரது கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவைத் திறந்தபோது உள்ளே மனீஷா மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அவர் அக்கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள், இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். திருப்பதி கோயிலுக்கு அரிசி காணிக்கை கொடுக்க மறக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதன் மூலம் அவர் வீட்டைச் சுத்தம் செய்தபோது எறும்பைப் பார்த்து பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின்... மேலும் பார்க்க

`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவு... மேலும் பார்க்க

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' - எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீக... மேலும் பார்க்க

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க