செய்திகள் :

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்

post image

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர்.

பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

பயணிகளில் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் பொது மக்களின் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

தெலங்கானா கோர விபத்து
தெலங்கானா கோர விபத்து

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``மோதலின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், லாரியின் ஜல்லிக்கற்கள் பேருந்து மீது விழுந்து, பல பயணிகள் கீழே சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் RTC பேருந்து, லாரி ஓட்டுநர்கள், தாயுடன் 10 மாத குழந்தை உட்பட பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

அவசரகாலக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று JCB இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னும் மோசமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

வார இறுதி நாள் என்பதால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என சுமார் 70 பயணிகள் அந்தப் பேருந்தில் சென்றதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது.

தெலங்கானா கோர விபத்து
தெலங்கானா கோர விபத்து

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, `` இந்த துயர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பி. சிவதர் ரெட்டி ஆகியோருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

காயமடைந்த அனைவரையும் தாமதமின்றி சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறேன்.

அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் பேசி, மீட்புப் பணிகளில் உதவ அனைத்து அரசுத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற போதுமான ஆம்புலன்ஸ்கள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறேன். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தி... மேலும் பார்க்க