செய்திகள் :

தேனி: எம்பி தங்க தமிழ்ச்செல்வனின் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு; காரணம் என்ன?

post image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ரூ. 2.82 கோடியில் பக்தர்கள் இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தேனி தொகுதி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது முன்னிலையில் வைத்தார்.

அரசு அலுவலர்கள் இந்து சமய அறநிலைத்துறையினர் என ஏராளமானோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது கோவிலுக்குள் இரண்டு பிரிவுகளாக வருகை தந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குச்சனூர் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கக் கூடாது எனக் கூறி ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் மின் மயானம் அமைக்க வேண்டும் எனக் கூறியும் திடீரென இரண்டு பிரிவுகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன்
வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன்

அவர்களை போலீசார் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்வதற்குத் தடை விதித்தனர்.

தொடர்ந்து விழா நடைபெறும் இடத்திலிருந்து வெளியே வந்த எம்பி தங்க தமிழ்ச்செல்வன் காரை வழிமறித்து பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

தங்க தமிழ்செல்வன் பொதுமக்களைச் சமாதானம் செய்ய முயன்றபோது அங்கு வருகை தந்த மற்றொரு தரப்பினர் மயானம் தேவை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வாக்குவாதம் செய்து மனுவினைக் கொடுக்க முயற்சி செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன்
வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன்

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் இரு தரப்பினரிடமும் புகார் மனுவினைப் பெற்றுக் கொண்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!' - போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம ம... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம் போன்றதா ’உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்?' என்ன சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள்?

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டதை அறிவித்திருக்கிறது மாநில அரசு.அதாவது சுமார் இருபது ஆண்டுகளாக அவர்கள் கேட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதில் TAPS எனப்படும் (Tamilnadu Assur... மேலும் பார்க்க

வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? - சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபை... மேலும் பார்க்க

மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" - சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு

Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025... மேலும் பார்க்க

இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத... மேலும் பார்க்க