செய்திகள் :

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

post image

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அப்போது, ``நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா?

ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை 'வீரமும், காதலும் தமிழர் பண்பாடு' என நியாயப்படுத்துகிறோம்.

வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம்.

ரவுடியிசம் - ஹீரோயிசம், புரட்சி - வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள்.

அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது" என்றார்.

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி ச... மேலும் பார்க்க

’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அதிமுக திண்டுக்கல் ச... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து ... மேலும் பார்க்க

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்... மேலும் பார்க்க