செய்திகள் :

``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.

அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன்

தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர்.

உண்மைநிலை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரமாக சென்னையும் அதற்கு அடுத்தபடியாக கோவையும் உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.

பெண்கள் அதிகமாக வேலை செய்யும் இடம், பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை அனைத்தும் கொடுக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்.

இரண்டு காரணங்களால்தான்..

இந்த காலத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் நடக்கும் தவறுகள்கூட வெளிச்சத்துக்கு வருகின்றன. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன்வருகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் பாலியல் விவகாரங்கள் அதிகமாக நடப்பது போன்று தெரிகிறது.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன்

எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறைகூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர்.

 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கூற தயங்கும் பழைய நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதிக அளவில் புகார் அளிக்க முன்வருகிறார்கள். பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம். 

அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு... மேலும் பார்க்க

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கா... மேலும் பார்க்க

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்... மேலும் பார்க்க

9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170... மேலும் பார்க்க

``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே 'ஹுண்டாய் ஐ20' கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. சிசி... மேலும் பார்க்க