செய்திகள் :

மும்பை டேங்கர் லாரி விபத்து; 12 மணி நேரம் 22 கிமீ தூரம் நின்ற 30 ஆயிரம் லாரிகள்; அரசு பஸ்கள் ரத்து

post image

மும்பை-புனே நெடுஞ்சாலை பொதுவாகவே எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். மும்பையில் இருந்து புனே செல்ல 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் நெடுஞ்சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பயண நேரம் அதிகரிக்கும்.

இந்தச் சாலையில் புனேயில் இருந்து மும்பை நோக்கி வரும் வழித்தடத்தில் அதோஷி சுரங்கப்பாதை அருகில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. புரொபொலினே என்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கேஸை அந்த டேங்கர் லாரி கொச்சியில் இருந்து எடுத்துக்கொண்டு குஜராத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

டேங்கர் விபத்துக்குள்ளாகி சரிந்தவுடன் அதிலிருந்து கேஸ் கசிய ஆரம்பித்தது.

இதனால் புனே-மும்பை நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை நிறுத்தினர். மாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்தது. மறுநாள் காலை வரை இந்தப் போக்குவரத்து சரி செய்யப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மும்பை நோக்கி வந்த லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் அப்படியே 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் 163 அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.

டேங்கரில் ஏற்பட்ட கசிவை அடைக்க தீயணைப்புத் துறையினரும், பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கேஸை வேறு டேங்கர் லாரிகளுக்கு மாற்றினர். இச்சம்பவத்தால் 30 ஆயிரம் லாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ரூ.20 கோடி அளவுக்கு லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்தை 12 மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அதிகமானோர் 12 மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மும்பையில் மருத்துவமனைக்குச் செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவித்தனர்.

`எங்களால் விடமுடியாது'- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 9வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த சேதன் குமாரின் என்பவரின் மகள்கள் விஷிகா (16), பிராச்சி (14), பாகி(12). இவர்கள் மூவரும் எதைச் செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்கள். மூன்று பேரும் கொரிய ஆன்ல... மேலும் பார்க்க

மைதானத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பானிய கைப்பந்து நட்சத்திரம்! - வைரல் வீடியோ பின்னணி

விளையாட்டு உலகில் வெற்றிகளையும் பதக்கங்களையும் போல, ஒரு வீரரின் நற்பண்புகளும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரப் கைபந்து விளையாட்டு வீரர் யூஜி ... மேலும் பார்க்க

`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்' - வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிர்வாகம் தனக்கென தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. இக்கொள்கையின் அடிப்படையில் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம... மேலும் பார்க்க

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.குடும்பத்த... மேலும் பார்க்க

"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக்கொண்டிருந்தபோது 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றைக் கண்டெடுத்தார். அடுத்த ஒரு மணி நே... மேலும் பார்க்க

அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதி - வழங்கினார் ரமேஷ் ஸ்ரீநிவாசன், CEO, Agilysys Inc.,USA

'அக்ஷயம் 365' என்பது 'MUDRA OOH' நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி ஆகும். இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இ... மேலும் பார்க்க