India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி...
Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், "ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான்.
சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள், அதிக அழுத்தமான சூழல்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட வீரர்களாக இருக்கின்றனர்.
இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று" என்று தெரிவித்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அந்த நேர்காணலில் பிரபலமடைந்த பிறகும் ஏன் ராஞ்சியில் வசிக்கிறீர்கள் என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், "சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நான் ராஞ்சியை விட்டு சென்றுவிடுவேன்.
இந்தச் சிறிய நகரத்தில் என்னால் வாழ முடியாது எனச் சீனியர் வீரர் ஒருவர் என்னிடம் பந்தயம் கட்டினார்.

அப்போது நான் அவரிடம் ஏன் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும்? இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றேன்.
அவர் சொல்லி இப்போது 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் இன்னும் ராஞ்சியில்தான் இருக்கிறேன். எனக்கு இந்த நகரம் மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.




















