செய்திகள் :

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

post image

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.

அமோல் மஜும்தாரை தங்கள் பெருமையாகக் கொண்டாடிய மக்கள், அவருக்கு ரோஜா இதழ் தூவி, மேள தாளங்கள் முழங்கி, வீடுகளிலிருந்து வாழ்த்தி கைதட்டி அவரை வரவேற்றுள்ளனர்.

கூடுதல் சிறப்பாக பெண்கள் சிலர் கையில் கிரிக்கெட் மட்டையை ஏந்தி, அவரை வரவேற்கும் கேடயம் போல மரியாதை செலுத்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்திய மகளிர் அணி உலக அரங்கில் சாதனைப் படைக்க தங்கள் வீதியிலிருந்த ஒருவர் உதவியிருப்பதைப் பெருமிதமாக வெளிப்படுத்தியதுடன் அமோல் மஜும்தாரும் தனது செயலுக்கு மனநிறைவுடன் மகிழ்ச்சிகொள்ளச் செய்துள்ளனர்.

அத்தனை வரவேற்ப்பையும் சிறிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மஜும்தார், "விளையாட்டு நாம் முன்னேறுவதற்கான வழி. நாம் வெறும் கிரிக்கெட் தேசமாக மட்டுமிருக்காமல், விளையாட்டை விரும்பும் தேசமாகவும் மாறுவோம்." எனக் கூட்டத்தினரிடம் பேசினார்.

முஜும்தார் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பதிவைக் கொண்டுள்ள வீரராக இருந்தார்.

ஆனாலும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து விளையாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் அவர்.

அவருக்கு இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி மிகவும் நெருக்கமான ஒன்று. அதேப்போல அவரின் இந்த வெற்றி அவரது பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி.

இந்தியர்களின் மனதுக்கு கிரிக்கெட் எத்தனை நெருக்கமானது என்பதை பயிற்சியாளருக்கு கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பு எடுத்துரைக்கிறது.

``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜெமிமா

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட... மேலும் பார்க்க

``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றா... மேலும் பார்க்க

'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' - கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்

முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதர... மேலும் பார்க்க

சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடு... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் வந்த பிரதிகா ராவலுக்கு மெடல் வழங்காதது ஏன்? ஐசிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் ம... மேலும் பார்க்க

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது.நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் த... மேலும் பார்க்க