செய்திகள் :

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

post image

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது இப்பணியில் ரிலையன்ஸ் நிறுவனமும் இறங்கி இருக்கிறது. மும்பை அந்தேரி ஜுகு கல்லி பகுதியில் 101 ஏக்கரில் குடிசைகள் அடங்கிய நிலப்பகுதியை மேம்படுத்தும் பில்டரை தேர்வு செய்வதற்காக குடிசை மறுசீரமைப்பு ஆணையம் டெண்டர் விட்டு இருந்தது.

இதில் சாபூர்ஜி அண்ட் பாலன்ஜி, ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் டெண்டர் கொடுத்து இருந்தன. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 4IR ரியாலிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாதேவ் ரியல்டர் நிறுவனத்துடன் இணைந்து டெண்டர் கொடுத்து இருந்தது.

கெளதம் அதானி

டெண்டர்கள் திறக்கப்பட்டதில் ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டு நிறுவனம் மாநில அரசின் குடிசை மறுசீரமைப்பு ஆணையத்திற்கு கொடுக்கும் நிதியின் அளவு அதிகமாக இருந்தது.

அதன் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. வழக்கமாக அரசு நிலத்தில் இருக்கும் குடிசைகளை மேம்படுத்தும் போது நில மதிப்பில் 25 சதவிகிதத்தை பில்டர்கள் அரசுக்கு வரியாக கொடுப்பார்கள். ஆனால் இதில் ரிலையன்ஸ் நிறுவனம் 35 சதவிகிதம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தது. எனவேதான் இப்பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் குடிசைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள வாடகை தொகையான ரூ.180 கோடியை உடனே கொடுக்கவேண்டும். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுக்கு தேவையான வாடகை ரூ.750 கோடியை முன்பணமாக கொடுக்கவேண்டும். ஜூஹு மறுசீரமைப்பு திட்டம், மும்பையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் மிகப்பெரியதாகும்.

``இத்திட்டத்தில் 28,000 க்கும் மேற்பட்ட தகுதியான குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடிக் கட்டடங்களில் வீடுகள் கட்டப்படும். மறுவாழ்வு இல்லங்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மேற்கொண்டு முடிக்கப்படும்போது அந்தப் பகுதி அடியோடு மாறி இருக்கும். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் நவீன வீட்டுவசதிகள் வழங்கப்படும்" என்று குடிசை மேம்பாட்டு திட்ட அதிகாரி மஹிந்திரா கல்யாண்கர் கூறினார். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு உத்தரவாதமும் கொடுக்கவேண்டும்.

101 ஏக்கர் நிலத்தில் 51 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் குடிசைகள் இருக்கிறது. அதாவது 61 ஏக்கரில் குடிசைகள் இருக்கிறது. எஞ்சிய இடத்தில் பழைய கட்டடங்கள் இருக்கின்றன. இப்பணிகளை முடிக்கும்போது அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை வீடுகளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்கு கொடுக்க வேண்டும். முகேஷ் அம்பானி சில்லறை வர்த்தகம், விவசாயம், தொலைத்தொடர்பு, எரிசக்தி, மின் உற்பத்தியை தொடர்ந்து ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்து இருக்கிறார்.

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ

விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் ப... மேலும் பார்க்க

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்கள்; அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. அதோடு இரவு 12 மணிக்குப் பிறகும் உறங்காமல் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் கேம் விளையாட எதிர... மேலும் பார்க்க

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க