செய்திகள் :

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் - அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

post image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களும் மாணவர்களும் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

cjp protest in delhi
cjp protest in delhi

இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த பீகாரைச் சேர்ந்த ரவி என்ற இளைஞர், ``கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும், என் தங்கையும் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து வருகிறோம். தங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தத் தேர்வுகள் வெறும் தேர்வுகள் மட்டுமல்ல, வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய வாய்ப்புகள். நாங்கள் வன்முறை செய்ய வரவில்லை. எங்களின் நியாயமான குரல் அதிகாரிகளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளோம்" என்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாஹில், ``கல்வி முறையைக் காப்பாற்றவும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தவும் தன் சொந்தப் பணத்தில் 50 மாணவர்களுடன் விமானம் மூலம் டெல்லி வந்து போராட்டத்தில் இணைந்துள்ளோம்." என்கிறார்.

cjp protest in delhi
cjp protest in delhi

உத்திரப்பிரதேசம் ஹாபூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பேசுகையில், ``எங்களுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. 2024 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் நீட் வினாத்தாள் கசிந்ததால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட இந்தபக்கம், நீட் மற்றும் சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு விவகாரங்களால் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

"அதிமுக-வுக்கு ஆதவ் அர்ஜுனா வர முயன்றார்; அதிமுகவை பற்றி பேச..!"- கே.பி முனுசாமி பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் த.வெ.கவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜ... மேலும் பார்க்க

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க