கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் சமூகப் பொறுப்பை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கைமாறு கருதாமல் திருப்பிக் கொடுப்பது எனும் இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஜி.ஆர்.டி.யின் பயணத்தின் இதயமாகத் திகழ்கிறது. அன்பும் நேர்மையும் கொண்ட தொடர்ச்சியான இந்த சமூக சேவை முயற்சிகளில் வெளிப்படுகிறது.
இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் சென்னையில் மிகவும் மதிக்கப்படும் இரண்டு சுகாதார நிறுவனங்களுக்கு ரூ. 50,00,000 லட்சம் நிதி உதவியுடன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கண் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்கான கேரோட்டோமீட்டர் மருத்துவ உபகரணத்தை வாங்குவதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ. 25,00,000 வழங்கப்பட்டுள்ளது.
மற்றும் அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ. 25,00,000 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகளின் ஆதரவு, பராமரிப்பு மற்றும் சிகிச்சை, ஆராய்ச்சி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கல்விக்காக வழங்கப்படுகிறது.
இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது, “ஜி.ஆர்.டி.யில், ஆரோக்கியமே வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். கண் பராமரிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சைத் துறைகளில் முன்னணி நிறுவனங்களை ஆதரிப்பது என்பது, எண்ணற்ற உயிர்களுக்கு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் கொண்டு வரும் பணியில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க வழிவகுக்கிறது. இந்த நிதியுதவி, மேம்பட்ட மருத்துவ சேவைகள் மிகவும் தேவையுள்ளவர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.” என்றார்.
இது குறித்து, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் கூறுகையில், “ஜி.ஆர்.டி.யின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்வாழ்த்துகளாலும் வடிவமைக்கப்பட்டதாகும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும் மருத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது, அந்த நம்பிக்கையை திருப்பிச் செலுத்தும் எங்கள் வழியாகும். சமூகங்கள் தங்கள் கடினமான தருணங்களில் இருக்கும் போது அவர்களுடன் துணை நிற்பதும், நலனுக்கான வழிகளை உருவாக்குவதும், ஒரு வணிகத்தை தாண்டிய சேவை என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட GRT ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. தங்கம், வைரம் பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், தலைமுறை தலைமுறையாக நம்பிக்கையின் மரபை உருவாக்கியுள்ளது.
தென்னிந்தியாவில் 65 கிளைகளுடன், மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை என மொத்தம் 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், அதன் சேவை செய்கின்ற சமூகங்களுக்கான நிலையான அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி, கலைநயத்தையும் உண்மையையும் இணைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
















