செய்திகள் :

Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

post image

நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'கோல்டு கார்டு' விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது.

'ட்ரம்ப் கோல்டு கார்டு' என்றால் என்ன?

ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும்.

ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold Card
ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold Card

EB-5 விசா திட்டம் என்றால் என்ன?

EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது.

இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய 'ட்ரம்ப் கோல்டு கார்டு' திட்டம்.

இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

ட்ரம்ப் கோல்டு கார்டு
ட்ரம்ப் கோல்டு கார்டு

விலை என்ன?

இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது.

அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

உங்களது தகவல்களை பதிவிட வேண்டும்.

அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும்.

இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும்.

அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும்.

அது 'ஓகே' ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது.

அமெரிக்க டாலர்கள்
அமெரிக்க டாலர்கள்

சிக்கலும்...

இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும்.

ஒரு கண்டிஷன்

இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும்.

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது ச... மேலும் பார்க்க