செய்திகள் :

TVK: ``காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படும் தவெக தொண்டர்கள்?'' - குற்றஞ்சாட்டும் மா.செக்கள்!

post image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தவெக தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

தவெக ஆர்ப்பாட்டம்
தவெக ஆர்ப்பாட்டம்

SIR க்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

சென்னை சிவானந்தம் சாலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, தாமு, சரவணன், திலீப் ஆகியோர் பேசுகையில்,

'பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது. திமுக SIR யை எதிர்ப்பதாக சொல்கிறது.

நாங்களும் SIR யை எதிர்த்துதானே போராடுகிறோம். பிறகு ஏன் இவ்வளவு இடைஞ்சல்கள்?

தவெக மா.செக்கள்
தவெக மா.செக்கள்

நிகழ்ச்சியை நடத்துகிற மா.செக்களை உள்ளே விடவே அத்தனை கட்டுப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுக்கிறார்கள்.பீச் ரோட்டில் வாகனங்களை நிறுத்த விட்டு 3 கி.மீ சுற்றி நடக்கவிடுகிறார்கள்.

அப்படியே நடந்து வந்தாலும் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். தவெக தொண்டர்களென தெரிந்தாலே தடுத்து நிறுத்துகிறார்கள்.

நேற்று இரவு வரை கமிஷனர் அலுவலகத்தில் பேசுகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என உறுதியளித்தனர். இப்போது ஏன் இப்படி தடுக்கிறார்கள்?' என்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, பின்னர் தொண்டர்கள் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்.இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.... மேலும் பார்க்க

சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? வல்லுநர்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்க கடந்த மார்ச் 2-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.செப்டம... மேலும் பார்க்க

S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமைய... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கு... மேலும் பார்க்க

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளு... மேலும் பார்க்க

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சா... மேலும் பார்க்க