செய்திகள் :

UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார்.

அவர் அங்கு மண் எடுத்துக்கொண்டிருந்தபோது ராஜ் என்ற விவசாயி அங்கு வந்தார். அவர் சுமேதாவிடம் பேச்சு கொடுத்தார். அப்படி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பின்புறமாக நின்று கொண்டு அப்பெண்ணின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

அவரை எதிர்த்து அப்பெண் போராடினார். ஆனால் ராஜ் அந்த பெண்ணை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தார். இதனால் அப்பெண் அந்த நபரின் நாக்கை கடித்து துப்பிவிட்டார்.

இது குறித்து அப்பெண் கூறுகையில், ''நான் மண் எடுத்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ராஜ் என்னுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே என்னைப் பின்புறமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அவரது நாக்கு எனது வாய்க்குள் வந்தது. நான் அவரைப் பிடித்து தள்ள முயன்றேன்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

ஆனால் அவர் இறுக்கிப் பிடித்ததால் என்னால் அவரைத் தள்ளிவிட முடியவில்லை. இதனால் பயத்தில் எனது வாய்க்குள் வந்த அவரின் நாக்கை அழுத்தமாகக் கடித்துவிட்டேன். உடனே அவர் வாயை எடுத்துக்கொண்டார்.

அவரது நாக்கு கீழே விழுந்தது. இதனால் நான் வீட்டிற்கு ஓடி வந்து எனது தாயாரிடம் தெரிவித்தேன். அவருடன் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தோம்'' என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாக்கு கடிபட்ட நபர் உடனே கீழே விழுந்த நாக்கை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்குச் சென்றார். அங்கு தன்னை அப்பெண்ணும், அவரது சகோதரரும் சேர்ந்து அடித்து நாக்கை வெட்டிவிட்டதாகக் குறிப்பிட்டார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால் அவரால் இனி சரியாகப் பேச முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரால் சத்தம் எழுப்ப முடியும். ஆனால் இனி வாழ்க்கையில் சரியாகப் பேசவே முடியாது. ராஜ் குடும்பத்தினர் அப்பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க