செய்திகள் :

திருப்பதி: `ரூ.100 கோடி காணிக்கையை திருடியது உண்மைதான்' - தேவஸ்தான கிளர்க் வாக்குமூலம்!

post image

திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ரவிக்குமார். இவர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய மதிப்பில் 72,000 அமெரிக்க டாலரை திருட முயன்றபோது கையும், களவுமாக பிடிப்பட்டார். அதே ஆண்டு ஜூன் மாதம் ரவிக்குமார் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்தார்.

அதைத் தொடர்ந்து திருப்பதியின் லோக் அதாலத் நீதிமன்றம் ரவிக்குமார் - அப்போதைய திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி பாதுகாப்பு அலுவலர் சதீஷ் குமார் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் 2023 செப்டம்ரம் மாதம் ரவிக்குமாரை விடுதலை செய்து அந்த வழக்கை முடித்து வைத்தது.

திருப்பதி
திருப்பதி

ஆனால், திருப்பதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மாச்செர்லா ஸ்ரீனிவாஸ் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அக்டோபர் மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிஐடி மற்றும் ஆந்திரா கிரைம் பிரான்ச் அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.

தங்களது விசாரணை முடிவுகளை டிசம்பர் 2-ம் தேதிக்குள் மூடிய கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய புகார்தாரரும், தேவஸ்தானத்தின் உதவி பாதுகாப்பு அலுவலருமான சதீஷ் குமார், 2023 நவம்பர் 10 அன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை முதற்கட்ட தகவலில் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், விசாரணை அமைப்புகளும் தங்கள் விசாரணை முடிவுகளை டிசம்பர் 2 அன்று உயர் நீதிமன்றத்தில் மூடிய கவர்களில் சமர்ப்பித்தன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார்
ரவிக்குமார்

இந்த நிலையில் ரவிக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கடந்த 2023 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ. 100 கோடியை திருடியது உண்மைதான். நீதிமன்றம் எத்தகைய ஆய்வுக்கு உத்தரவிட்டாலும் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். என்னை மேலும் துன்புறுத்தாதீர்கள். நானும் என் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம்.

எனது தவறை உணர்ந்து நான் கேபிள் தொழிலும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்த சொத்தில் 90 சதவீத சொத்துகளை தேவஸ்தானத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மதத்துடன் எழுதி வைத்து விட்டேன். நான் முழு மனதுடன் சுவாமிக்கு எழுதி கொடுத்தேன்.

நான் மிகப் பெரிய பாவம் செய்ததை நினைத்தும் எனது மனைவி, பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்தும் நான் கவலைப்படாத நாளே இல்லை. வேறு சிலருக்கு நான் பணம் கொடுத்ததாகவும் வேறு வகைகளில் எதையோ கொடுத்ததாகவும் கூறும் தகவல்களில் உண்மையில்லை.

ரவிக்குமார்
ரவிக்குமார்

அது போல் காணிக்கை பணத்தை திருட அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என பரவும் தகவலிலும் உண்மை இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பதை நிரூபிக்க எந்த மருத்துவப் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க

`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரி... மேலும் பார்க்க

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நட... மேலும் பார்க்க

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வை... மேலும் பார்க்க

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக... மேலும் பார்க்க