செய்திகள் :

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

post image

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது துணை இயக்குனரின் அறையிலுள்ள அலமாரியில் இருந்து ரூ.2.22 லட்சம் மற்றும் அவரது கார் ஓட்டுநர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.27,400 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சரவண பாபு மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சரவண பாபு- துணை இயக்குனர்
சரவண பாபு- துணை இயக்குனர்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு முன் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் பைக்கில் வந்து, கையில் பையுடன் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

துறை சார்ந்தவர்களே பழிவாங்கும் நோக்கில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த சரவண பாபு இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமாணியிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆனந்த் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினரான சுடலை ஆகியோரை கடந்த 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

ஆனந்த் மீது துறை சார்ந்த நடவடிக்கையாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த லஞ்ச புகார் துணை இயக்குனருக்கு எதிரான சதிச்செயல் என்பது தெரிய வந்தது.

போலீஸார் சோதனை
போலீஸார் சோதனை

இச்சம்பவம் தமிழக தீயணைப்புத் துறையையே உலுக்கியது. இதற்கிடையில் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் நுழைந்த பணத்தை வைத்த அந்த நபர் யார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையில் அந்த நபர் வெளிமாநிலத்திற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது, அவர் மும்பை-தாராவியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பைக்கு விரைந்த தனிப்படை போலீஸார், தாராவியில் பதுங்கியிருந்த நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்பவரை சுற்றிவளைத்து கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில், “துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் பணத்தை வைப்பதற்காக எனக்கு ரூ.50 ஆயிரம் பேரம் பேசப்பட்டது. அதில் ரூ.40 ஆயிரம் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது” என கூறி தவறை ஒப்புக்கொண்டார்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

விஜய்க்கு அலுவலகத்தின் சாவி எப்படி கிடைத்தது? இந்த சதித்திட்டத்தில் வேறு யாரெல்லாம் தொடர்பு உள்ளனர்? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்த் விசாரணையில் கூறும் தகவல்களின் அடிப்படையில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க

`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரி... மேலும் பார்க்க

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வை... மேலும் பார்க்க

திருப்பதி: `ரூ.100 கோடி காணிக்கையை திருடியது உண்மைதான்' - தேவஸ்தான கிளர்க் வாக்குமூலம்!

திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ரவிக்குமார். இவர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய மதிப்பில் 72,000 அமெரிக்க டாலரை திருட முயன்றபோது க... மேலும் பார்க்க

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக... மேலும் பார்க்க