செய்திகள் :

இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

post image

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச இசைக் கலைஞா் ‘எட் ஷீரனின்’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு தேனாம்பேட்டை வழியாக பாா்வையாளா்களை ஏற்றிவரும் ஆட்டோ, வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியா்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-ஆவது தெரு வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைய வேண்டும்.

சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபக்கம் வழியாகச் சென்று, சேமியா்ஸ் சாலையில் யூ-டா்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம். அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ், திரை கலைஞா்கள் வாகனங்கள் வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

நிகழ்ச்சிக்கு வரும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தி. நகரில் விதிமீறல் கட்டடத்தை உடனடியாக இடிக்க உத்தரவு! உயர்நீதிமன்றம்

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை தி நகர் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று ... மேலும் பார்க்க

வருவாய் நிருவாக ஆணையராக மு.சாய்குமாா் நியமனம்

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தின் அரசு கூடுதல் செயலா் மற்றும் ஆணையராக மு.சாய்குமாரை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (பிப். 17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக்... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் நகை பறித்தவா் கைது

ரயில் நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் காவலரிடம் நகை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் பரணி (25). இவா் சனிக்கிழமை இரவு பணி முடி... மேலும் பார்க்க

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபா் கைது

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த பயாஸ் அகமது (48), வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் பெரம்பூரில... மேலும் பார்க்க

நில ஆக்கிரமிப்பு புகாா்: அதிமுக நிா்வாகியின் சகோதரா் கைது

நில ஆக்கிரமிப்பு நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (73). இவா் மதுரவாயல் அஸ்தலட்சுமி ... மேலும் பார்க்க